கோவை-சத்தி சாலையில் மீண்டும் மரண பயணம்: அசுர வேகத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகள்


கோவை-பொள்ளாச்சி சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வழியே செல்லும் பேருந்துகள் தாறுமாறாக அதிக வேகத்தில் செல்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பான காணொலி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அதிவேகமாக பேருந்துகளை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் சம்பந்தப்பட்ட பேருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.  தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர்களிடையே அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அதி வேகத்தில் பேருந்தை இயக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.



இந்நிலையில், தற்போது கோவை-சத்தி சாலையில் இயக்கப்படும் பேருந்துகளும் அசுர வேகத்தில் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

குறுகலான நெடுஞ்சாலையான கோவை-சத்தி சாலையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் போட்டி போட்டுக்கொண்டு பேருந்துகளை இயக்கி வருகினறனர். இது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எதிரே வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல் பேருந்தின் ஓட்டுனர் ஒற்றை பாதையில் அதிவேகமாக பேருந்தை இயக்கும் காட்சி பதிவாகியுள்ளது. 

இது மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு அதிவேகமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் நடவடிக்கை எடுப்பதோடு, அந்த பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...