கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் புதிய மதுபான கடை: பொதுமக்கள் எதிர்ப்பு

கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே புதிய தனியார் FL2 மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குடியிருப்பு பகுதி, சந்தை அருகில் கடை அமைவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்கின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், சந்தை அருகே புதிதாக தனியார் FL2 மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய FL2 மதுபான கடை அமையவிருக்கும் இடம், குடியிருப்புப் பகுதி மற்றும் சந்தை ஆகியவை ஒரே இடத்தில் உள்ளதால், பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரிய இடையூறு ஏற்படும் என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் என்றும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த இடத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடைக்கு பின்புறம் இந்த புதிய தனியார் FL2 மதுபான கடை அமைந்தால், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கும், சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலும் ஆபத்தும் உருவாகும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, புதிய FL2 மதுபான கடை அமைவதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று கோரி, அந்த பகுதி பொதுமக்கள் சார்பாக இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...