கோவையில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. கடும் வெயிலுக்குப் பிறகு பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Coimbatore: கோவையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.

கோவையில் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், 100 அடி சாலை, சித்தாபுதூர், ராம் நகர், பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், ஆவாரம்பாளையம், கணபதி ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது.



காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை நேரத்தில் கோவை மாநகர் பகுதியில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. இரவில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த ஒன்றரை மாதமாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், இப்போது பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...