சர்வதேச காராத்தே சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஆஸ்திரியாவில் நடைபெற்ற 7வது உலக கோஜுரியோ கராத்தே சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு சரவணம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Coimbatore: கோவையைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச கராத்தே போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களை பாராட்டும் விதமாக கோவை சரவணம்பட்டி பகுதியில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அண்மையில் புனேவில் நடைபெற்ற ஆசிய அளவிலான கோஜுரியோ கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவை வீரர்கள், ஆஸ்திரியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆஸ்திரியாவில் நடந்த 7வது உலக கோஜுரியோ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 26 நாடுகளில் இருந்து 1200 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய அணி சார்பில் கோவையைச் சேர்ந்த ஆறு பேர் கலந்து கொண்டனர்.



கட்டா, குமித்தே, குழு என வயது மற்றும் எடை அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவையைச் சேர்ந்த கைலாஷ், சுனில், நந்தகுமார், ஆகாஷ், மஹா கவுரி ஆகிய ஐந்து பேரும் தலா ஒரு வெண்கலப் பதக்கமும், தார்ணீஷ் என்ற மாணவர் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்தனர்.

இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று கோவைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு கோவை சரவணம்பட்டி பகுதியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் கராத்தே சாம்பியன்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஏசியன் கராத்தே அகாடமி சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் பகுதி செயலாளர் சிரவை சிவா, பார்த்திபன், பாஸ்கரன், சென்செய் ஆர்.முத்துராஜு, ஹென்றி சுரேஷ், சென்செய் பிரமோஷ், கோபாலகிருஷ்ணன், செந்தில்வேல், ஷிஹான் டி.முத்தையா, சுகுமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...