உடுமலையில் முறைகேடாக செயல்படும் மதுபானக் கூடங்களில் விதிமீறி மது விற்பனை

உடுமலையில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி இயங்கும் மதுபானக் கூடங்கள் விதிமீறி மது விற்பனை செய்கின்றன. பொதுமக்கள் அதிருப்தியுடன் போராட்டத்திற்கு தயாராகின்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகில் முறையான அனுமதியின்றி இயங்கும் மதுபானக் கூடங்கள் விதிமீறி மது விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அனுஷம் திரையரங்கம் பின்புறம், ராஜேந்திர ரோடு பூங்கா எதிரில், அர்பன் வங்கி எதிரில், தாராபுரம் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு அருகிலேயே அனுமதியற்ற மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கூடங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையும் மது விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.



இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் உடுமலை காவல்துறை மற்றும் தாராபுரம் மதுவிலக்கு காவல்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காவல்துறையின் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...