உடுமலை அதிமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல்

உடுமலை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக பிரமுகரின் மகன் கோகுல்நாத்தின் வீட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அந்தியூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக பிரமுகரின் மகனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் கூறினார்.

உடுமலை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சாமி என்கிற சிவராஜின் மகன் கோகுல்நாத், கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி தனது திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்க பொள்ளாச்சி நோக்கி சொகுசு காரில் சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இந்நிலையில், இன்று உடுமலை மின் நகரில் உள்ள கோகுல்நாத்தின் இல்லத்திற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன், முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், எம்.எஸ். ஆனந்தன் மற்றும் உடுமலை நகர அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...