தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலர்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த ஒரு நாள் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 9, 2024 அன்று மலர்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் மகளிர் பங்கேற்கலாம்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வருகின்ற அக்டோபர் 9, 2024 புதன்கிழமை அன்று "மலர்களில் மதிப்பு கூட்டுதல்" பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் பொதுமக்கள், அறிவியல் மாணவர்கள், புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், பல வகைப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட மலர் பொருட்களான பூமாலை, ஜடை பட்டி, நிறமேற்றப்பட்ட மலர்கள், மலர்களைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றை குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதாகும்.

பயிற்சி காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ.1000 ஆகும், இதில் மதிய உணவு மற்றும் தேநீர் அடங்கும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 8, 2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு முனைவர் சு.கார்த்திகேயன் (99654 35081) அல்லது முனைவர் இரா.சித்ரா (99427 66922) ஆகியோரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மலரியல் துறையில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...