உப்பாறு அணைக்கு தண்ணீர் கோரி விவசாயிகள் இரண்டாவது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பொள்ளாச்சியில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை விவசாயிகள் கண்டித்துள்ளனர்.



Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட உப்பாறு பகுதியில் உள்ள அணைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உப்பாறு பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை பெய்து பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி வந்த நிலையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி உப்பாறு பகுதி விவசாயிகள் நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நீர்வளத் துறை அதிகாரியிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பதிலும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். அரசாணை, நீதிமன்ற வழக்கு தீர்ப்பு போன்ற ஆவணங்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் மெத்தனப்போக்கில் செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடும் வரையில் காத்திருப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிவகுமார் கூறுகையில், "நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...