மாதப்பூர் விவசாயிகளுக்கு வழித்தடம் கோரி ஆட்சியரிடம் திமுக செயலாளர் மனு

கோவை தெற்கு மாவட்டம் மாதப்பூர் ஊராட்சியில் இரயில்வே பணிகளால் வழித்தடம் இழந்த 18 குடும்பங்களுக்கு உதவக் கோரி, திமுக செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


Coimbatore: கோவை தெற்கு மாவட்டம், சூலூர் ஒன்றியம், மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரயில்வே எல்லைப் பணிகள் காரணமாக 18 குடும்பங்கள் தங்கள் வழித்தடத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் வழித்தடம் பெற்றுத்தர வேண்டும் என்று கோரி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மாதப்பூர், தொட்டிய பாளையம், இராமாச்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் இரயில்வே பாதை எல்லை பணிகளுக்காக இரயில்வே நிர்வாகம் தனியார் மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தடுப்பு வேலிகள் அமைக்க குழிகள் தோண்டியுள்ளது. இதன் காரணமாக 18 குடும்பங்கள் தங்கள் வழித்தடத்தை இழந்துள்ளனர்.

இந்த நிலையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் அவர்களுடைய பாதைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி, சிங்காநல்லூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தளபதி முருகேசன் இன்று (அக்டோபர் 4) மனு அளித்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் நேரில் சந்தித்து இந்த பிரச்சினையை எடுத்துரைத்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...