கோவை வெள்ளியங்கிரி மலை பகுதியில் அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், பூண்டி அடுத்து மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. மலையின் அடிவாரம் முதல் ஏழு மலைகளைக் கடந்து சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட ஆண்டுதோறும் பக்தர்கள் படையெடுத்து வருவர். மேலும், கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாகவும் வெள்ளியங்கிரி மலை உள்ளது.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) திருவாரூரைச் சேர்ந்த ஷ்யாம் (50) என்பவர் வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையில் சென்றுகொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை (நேற்று) நள்ளிரவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத்துறை சோதனை சாவடி அருகே அமர்ந்திருந்த வயதான ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஒரேநாளில் அடுத்தடுத்து உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆலாந்துறை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...