கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்

கோவையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு 6 நாள் பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம் நடைபெற்றது. 29 கல்லூரிகளில் இருந்து 190 மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம் நடைபெற்றது.

உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் துயர் நீக்கவும், மேம்பாட்டுக்காகவும் சாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி, தன்னலமற்ற சேவையையே குறிக்கோளாகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2011 ஆண்டு முதல் இளையோர் செஞ்சிலுவை சங்கம் வாயிலாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேரிடர் கால மீட்பு, அவசர கால முதலுதவி போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.



கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி மேலாண்மை குறித்த ஆறு நாட்கள் பயிற்சி முகாம் துவங்கியது. கோவை இடிகரை பகுதியில் உள்ள ஆதித்யா சர்வதேச பள்ளியில் இந்த முகாம் நடைபெற்றது.

இதன் துவக்க விழா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் துணை தலைவர் டாக்டர் முரளி, உயர்மட்ட குழு உறுப்பினர் மோகன் சங்கர், குமுதா பழனிச்சாமி, பூங்கோதை மற்றும் பள்ளி முதல்வர் அத்யா பர்வீன் பாபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆறு நாள் முகாமில் சுமார் 29 கல்லூரிகளில் இருந்து 190 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகாமில் ஒவ்வொரு நாளும் விபத்து, இயற்கை சீற்றம், நில அதிர்வு, வெள்ள பெருக்கு, தீ விபத்து போன்ற பேரிடர் நேரங்களில் இடர்பாடுகளில் பாதிக்கப்பட்டோருக்கு சரியான முதலுதவி அளித்து உயிர் காப்பது, சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி எவ்வாறு செயல்படுவது போன்ற பேரிடர் கால மீட்பு மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கப்பட்டதாக செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...