ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவு திறப்பு: அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்பு

கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய இப்பிரிவு மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும்.



கோவை: கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் கொண்ட 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.



மேலும், குப்புசாமி நாயுடு அறக்கட்டளை துணைத்தலைவர் R.கோபிநாத், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி Dr.ரகுபதி வேலுசாமி, ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், "தமிழகத்தின் மருத்துவத்துறை அடையாளங்களில் ஒன்றாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை பத்தாண்டுகளுக்கு முன்னரே புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய மருத்துவ மையமாகும்" என்றார்.

"முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கடந்த ஆண்டு, ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 18 வயது நிரம்பிய அனைத்து பொதுமக்களுக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டது. இதில் 110க்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் 38 வருவாய் மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறியும் பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், "மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, கலைஞரின் வருமுன் காப்போம், பாதம் பாதுகாப்போம் உள்ளிட்ட 36 திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவமான திட்டங்களாகும்" என்றார்.

"இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 1 லட்சம் ரூபாய் தொகை விரைவில் 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றும் அவர் அறிவித்தார்.

இறுதியாக, புற்றுநோய் மற்றும் இருதய பாதிப்புகளுக்கான நடவடிக்கையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...