கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினர். இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர். இந்த நடவடிக்கை, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

கோவை, ராமநாதபுரம் சந்திப்பில் இருந்து நஞ்சுண்டாபுரம் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்திருப்பதால், ரோட்டின் அகலம் சுருங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் நெடுநேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழித்தடமாக, அருகாமையில் உள்ள ஒலம்பஸ் 80 அடி ரோட்டை உருவாக்க மாநகராட்சி முடிவெடுத்தது.

மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த் பிரபாகர் தலைமையில் நகரமைப்பு பிரிவினர், 80 அடி ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ரோட்டின் ஒரு புறம், 70 கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பல கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த ஷெட்கள், மழைநீர் வடிகால் மீது கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் அடுப்புகள் ஆகியவை அகற்றப்பட்டன.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், "80 அடி ரோட்டில் இருந்து 100 ரோட்டுக்குச் செல்ல இணைப்பு சாலை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. இச்சாலை உருவானால் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து 100 ரோட்டில் வந்து, 80 அடி ரோடு வழியாக திருச்சி ரோட்டை அடையலாம். இதனால் நஞ்சுண்டாபுரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாது" என்று தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை மூலம் நகரின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...