கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினர். இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர். இந்த நடவடிக்கை, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

கோவை, ராமநாதபுரம் சந்திப்பில் இருந்து நஞ்சுண்டாபுரம் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்திருப்பதால், ரோட்டின் அகலம் சுருங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் நெடுநேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழித்தடமாக, அருகாமையில் உள்ள ஒலம்பஸ் 80 அடி ரோட்டை உருவாக்க மாநகராட்சி முடிவெடுத்தது.

மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த் பிரபாகர் தலைமையில் நகரமைப்பு பிரிவினர், 80 அடி ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ரோட்டின் ஒரு புறம், 70 கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பல கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த ஷெட்கள், மழைநீர் வடிகால் மீது கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் அடுப்புகள் ஆகியவை அகற்றப்பட்டன.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், "80 அடி ரோட்டில் இருந்து 100 ரோட்டுக்குச் செல்ல இணைப்பு சாலை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. இச்சாலை உருவானால் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து 100 ரோட்டில் வந்து, 80 அடி ரோடு வழியாக திருச்சி ரோட்டை அடையலாம். இதனால் நஞ்சுண்டாபுரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாது" என்று தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை மூலம் நகரின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...