தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்பட்டது. விழிப்புணர்வு பேரணி, வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 29, 2024 அன்று கொண்டாடப்பட்டது. வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உணவு பதன் செய் பொறியியல் துறையால் நிறுவப்பட்ட உணவுக்கழகத்தின் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த ஆண்டின் கருப்பொருள் "உணவு இழப்பு மற்றும் கழிவுகளைக் குறைப்பதற்கான கால நிலை நிதி" என்பதாகும். இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கணித்தல் போன்ற சவால்களை சமாளிக்க முதலீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.



விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி, வினாடி-வினா, சுவரொட்டி வழங்குதல், மீம் உருவாக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமி, வேளாண்பொறியியல் முதன்மையர் முனைவர் A. ரவிராஜ், மாணவர் நலன் முதன்மையர் முனைவர் N. மரகதம், மற்றும் பேராசிரியர் முனைவர் M. பாலகிருஷ்ணன் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

உணவுப்பதப்படுத்துதல் துறைத்தலைவர், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு உணவு இழப்பு மற்றும் கழிவுத்தடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விழிப்புணர்வு பேரணியில் சுமார் 600 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, உணவு இழப்பு மற்றும் கழிவுகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்வு, உணவு இழப்பு மற்றும் கழிவுகளின் தாக்கத்தை குறைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, இந்த பிரச்சினையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாணவர்களை ஊக்குவித்தது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...