கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன

கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம், தென் சங்கம்பாளையம், பிள்ளையப்பன்பாளையம் மற்றும் கணியூர் ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. பெரியநாயக்கன்பாளையம், தென் சங்கம்பாளையம், பிள்ளையப்பன்பாளையம் மற்றும் கணியூர் ஆகிய பகுதிகளில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகளிடம் பொது மக்கள் மனுக்களை வழங்கினர். மேலும், புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தென் சங்கம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் எஸ் ஆர் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பிள்ளையப்பன்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தலைவர் இலட்சுமண மூர்த்தி தலைமையில் ஊராட்சி வரவு செலவுகள் படித்தல், தூய்மை பணியாளர்களை கௌரவித்தல், பால்வினை நோய்கள் குறித்த உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.



சூலூர் வட்டம் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளுப்பாளையம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினார்கள். இலட்சுமி நகர் பகுதியில் உள்ள கோரிக்கைகளை இலட்சுமி வினாயகா மக்கள் சேவை சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்தது பாராட்டத்தக்கது.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...