மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி கிராமப்புற பொதுமக்கள் மனு

கோவை, மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி கிராமப்புற ஊராட்சியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த கிராமப்புற பொதுமக்கள் மதுக்கரை ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில், மலுமிச்சம்பட்டி கிராம ஊராட்சியில் இருக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளால் ஊர்மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் சில பெண்கள் எனப் பலர் மதுவிற்கு அடிமையாகிவிட்டதாகவும். அதுமட்டுமல்லாமல், அருகாமையில் உள்ள கிராமத்து மக்கள் பலரையும் குடிநோயளிகளாகவும் ஆக்கிவிட்டதாகவும்.

 எனவே, இந்த மதுபானக்கடைகளால் கிராமத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதகவும், இந்த மதுக்கடைகளால் பெண்கள் மீதான வன்முறை, சாலை விபத்துக்கள் என மக்களுக்குப் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், இனியும் இந்த கடைகளால் கிராம மக்கள் பாதிப்படையக் கூடாது. எனவே ஊராட்சியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என கூறப்படிருந்தது.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...