கோவை கூடலூரில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதை கொண்டாடிய திமுகவினர்

கோவை கூடலூர் வீரபாண்டி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் அறிவரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு திமுகவினர் கொண்டாடினர். நகர திமுக சார்பில் நகர செயலாளர் அறிவரசு தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும், செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியின் வீரபாண்டி பிரிவில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், அப்பகுதி மக்கள், பேருந்து பயணிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நகரமன்ற துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், அகில் சந்திரசேகர் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர், ஐ.டி.விங் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...