கோவை தொண்டாமுத்தூரில் யானை தாக்கி கூலித்தொழிலாளி பலி

கோவை தொண்டாமுத்தூரில் நள்ளிரவில் வீட்டு முன் உறங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி சந்திரனை (47) காட்டு யானை தாக்கி கொன்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கூலித்தொழிலாளி ஒருவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தொண்டாமுத்தூர் நரசீபுரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த சந்திரன் (47) என்ற கூலித்தொழிலாளி, நள்ளிரவு 12 மணியளவில் தனது வீட்டின் முன்புறம் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வனத்திற்குள் விரட்டி வரும் சத்தம் கேட்டு எழுந்த சந்திரன், யானையைப் பார்த்து பயந்து ஓடியுள்ளார்.

அவரை விரட்டிச் சென்ற யானை, தனது தந்தத்தால் சந்திரனின் முதுகில் குத்தி, காலால் மிதித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சந்திரன், முதுகு நெஞ்சுப் பகுதியில் இரத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலாந்துறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த சந்திரனின் உடலை கைப்பற்றி, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் எனவும், யானைகளின் பக்கம் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...