கோவையில் கத்தியைக் காட்டி போலீசாரை மிரட்டிய இளைஞர் கைது: 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவையில் வாகன சோதனையின் போது 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் கண்டுபிடிப்பு. போலீசாரை கத்தியால் மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். அரிசி, கத்தி மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல்.


Coimbatore: கோவை கரும்புக்கடை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸ் குழு, நேற்று (செப்டம்பர் 28) மாலை புட்டுவிக்கி ரோடு சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, ஸ்கூட்டரில் மூட்டைகளுடன் வந்த இளைஞர் ஒருவரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் சுமார் 150 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தல் செய்யப்படுவது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டினார். உடனடியாக செயல்பட்ட போலீசார், அவரை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர் தெற்கு உக்கடம் ஜிஎம் நகரைச் சேர்ந்த ஜமீஷா (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 150 கிலோ ரேஷன் அரிசி, ஒரு பட்டாக் கத்தி மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


இச்சம்பவம் குறித்து கரும்புக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...

ஓணம்பாளையம் குடியிருப்பில் கஞ்சா செடி பறிமுதல் - வட மாநில தொழிலாளர்கள் விசாரணையில்

வடவள்ளி அருகே ஓணம்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் 4 அடி உயர கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டது. கா...

தேர்தல் சின்ன விவகாரம்: குப்பை சேகரிப்பு விசில் ஒலிக்கத் தடை கோரி மனு

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும்போது அடிக்கும் விசில், அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம் என்ப...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி மாமன்ற உறுப்பினர் மனு: கோவை ஆட்சியருக்கு சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பின்போது தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் விசில், மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல்...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மனு

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்துவது மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல் சின்...

பி.என்.புதூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்; வே.கௌதம்குமார் நினைவஞ்சலி

கோவை பி.என்.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 22-ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி...