வால்பாறை சாலையில் கார் விபத்தில் சிக்கிய கொள்ளையன் கைது: திருடிய கார், பணம் மற்றும் நகைகள் மீட்பு

கோவை பீளமேட்டில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த சாலமன் என்ற உமேஷ் குமார், திருடிய காரில் வால்பாறை செல்லும் வழியில் விபத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார். திருடிய பொருட்கள் மீட்கப்பட்டன.


கோவை: கோவை பீளமேட்டில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த பிறகு தப்பி ஓடிய கொள்ளையன், வால்பாறை செல்லும் சாலையில் கார் விபத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த சாலமன் என்கிற உமேஷ் குமார் (27) என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை பீளமேட்டில் வெளியூர் சென்றிருந்த தொழிலதிபர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு, வாசலில் நிறுத்தி இருந்த காரையும் திருடிக் கொண்டு தப்பினார்.

இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், செப்டம்பர் 28 அன்று வால்பாறை செல்லும் வழியில் ஒரு வளைவில் திரும்பும்போது கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய நபர் பீளமேடு கொள்ளை வழக்கில் தொடர்புடைய சாலமன் என்பது தெரியவந்தது.



விபத்தில் சாலமனுக்கு கை முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலமனை கைது செய்தனர். சேதமடைந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சாலமனிடமிருந்து மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.1,20,000 ரொக்கப்பணம், மற்றும் 5 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டன. காயமடைந்த சாலமன் கோவைக்கு அழைத்து வரப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலமன் மீது உள்ள மற்ற வழக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...