கோவையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மனித சங்கிலி: காவல் துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தூய்மை இந்தியா விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி அமைத்தனர். காவல் துணை ஆணையர் ஸ்டாலின் உரையாற்றி உறுதிமொழி ஏற்றார்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



அவர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும், மாணவர்களுடன் சேர்ந்து தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



அவர்கள் "சுத்தமாக இருங்கள் ஆரோக்கியமாக இருங்கள்", "குப்பை போடவே குப்பை தொட்டி", "சுத்தமான பூமி", "பசுமை பூமி" உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...