பத்மஸ்ரீ பாப்பம்மாள் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் (110) உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயற்கை விவசாயத்திற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் நேற்று இரவு காலமானார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் என்கிற பாப்பம்மாள் (110) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் தனது இளம் வயதிலிருந்தே விவசாயம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்தார். 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்த அவரது ஆர்வத்தைக் கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

விருது வழங்கும் போது பிரதமர் நரேந்திர மோடி பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவரது 109வது வயதில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரது பேத்தி கமலம் மற்றும் மகள் ஜெயசுதா ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.

பாப்பம்மாள் இறந்த தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக வந்து அவரது உடலுக்கு காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...