கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை

கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த புகார் அடிப்படையில் 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை மாநகர காவல்துறையினருக்கு கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது.



இதனையடுத்து, கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.



இந்த சோதனையின் போது, கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் வேறு யாரேனும் தங்கி இருக்கிறார்களா, வேறு ஏதேனும் சட்டவிரோத பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



இந்த அதிரடி சோதனையில் காவல் ஆய்வாளர்கள் கந்தசாமி, அருண், ராஜேஷ், முத்துலட்சுமி, தௌலத் நிஷா, பிரான்சிலின், சரவணன் மற்றும் உதவி ஆணையர் பார்த்திபன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.



பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...