பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் பழனிசெவ்வேள் தலைமையில் நடந்த இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை பகுதியில் இன்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட தலைவர் பழனிசெவ்வேள் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட பொறுப்பாளர் குனியமுத்தூர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் வந்து புதிய உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் குணசேகரன், மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி, நகரத் தலைவர் சுப்பராயன் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...