ஆனைமலையில் தொழிலாளி மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞர் விபத்தில் உயிரிழப்பு

ஆனைமலையில் மில் தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி உயிரிழப்பு. பொள்ளாச்சி அருகே வன உயிரின புகைப்படக் கலைஞர் ஜீப் விபத்தில் பலி. இரு சம்பவங்களிலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


Coimbatore: ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த இரண்டு தனித்தனி விபத்துகளில் இரு நபர்கள் உயிரிழந்தனர்.

ஆனைமலை அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்தரசு (60) மனைவி தனலட்சுமி (58), அங்குள்ள மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்ற அவர், அதிகாலை 2:00 மணிக்கு வெப் கார்டிங் இயந்திரத்தில் வேலை செய்த போது, புடவை மாட்டி வலதுகை முட்டியில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த ரோகித் காளிங்கராயன் (41), விவசாயி மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞர், சேத்துமடையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு ஜீப்பின் பின்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தார். ஓட்டுநர் பிரதீப் ஜீப்பை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதாக தெரிகிறது. வேகத்தடையில் ஜீப் ஏறியபோது ரோகித் காளிங்காராயன் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இரு சம்பவங்கள் குறித்தும் ஆனைமலை போலீஸார் நேற்று (செப்.26) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...