தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நடத்தும் 34-வது வியாபாரிகள் தின மாநாடு

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந் தேதி வணிகர் தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நடத்தும் 34-வது வியாபாரிகள் தின மாநாடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த வணிகர் சங்க பேரவை மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பேருந்து, வேன், கார்களில் வணிகர்கள் திரண்டனர்.

இதைத்தொடர்ந்து, மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், மே 5ம் தேதி வியாபாரிகள் தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் டீ கடை, டிபன் கடைகளைத் திறந்து வைக்க அனுமதி தர வேண்டும். ஆத்துபாலம் முதல் ஒப்பணக்கார வீதி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக அரசை தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.



விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை தீர்க்க, இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது. சிறு வியாபாரிகளுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும். வர இருக்கும் ஜி.எஸ்.டி வரி குறித்து பல விதமான அனுமானங்கள் உலாவுகின்றன. வரி என்பதும் வியாபாரிகளுக்கு சிக்கலாகவோ, சுமையாகவோ இருக்க கூடாது என்றும் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தலைவர் பரமசிவம், பொது செயலாளர் ராஜசிங், பொருளாளர் காசிலிங்கம், கெளரவ ஆலோசகர் கருணாகரன், மாவட்ட தலைவர் விசுவநாதன், துணைத் தலைவர் சிலுவை முத்துக்குமார் மற்றும் அரோமா நிறுவனத் தலைவர் பொன்னுசாமி மற்றும் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...