கோவை இடையர்பாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி கொள்ளை

கோவையில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது இந்த கொள்ளை நடந்துள்ளது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனி அருகிலுள்ள இடையர்பாளையம், பாரிநகரைச் சேர்ந்த நாகராஜன் (70 வயது) என்பவர் தொழிலதிபராக உள்ளார். கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி, நாகராஜன் தனது குடும்பத்துடன் தொழில் நிமித்தமாக பெங்களூரு சென்றிருந்தார். அவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.

நேற்று (செப்டம்பர் 25) நாகராஜன் தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த 70 பவுன் நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவை திருடப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.

இதனையடுத்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, குமார், சுரேஷ் உள்ளிட்ட சிலர் இந்த கொள்ளையை நடத்தியது தெரிய வந்தது.

இது குறித்து நாகராஜன், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், துணை ஆய்வாளர் தீபா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...