பொள்ளாச்சியில் புற்றுநோய் சிகிச்சை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்: 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் சார்பில் புற்றுநோய் சிகிச்சை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சியில் உள்ள மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.



சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ராகவேந்திரா ராவ் தனது உரையில், மத்திய அரசும் மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையமும் இணைந்து புற்றுநோய் குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தம் இந்த நிகழ்ச்சியில் கையெழுத்தானதாகவும் அவர் குறிப்பிட்டார்.



கருத்தரங்கில், மிராக்கல் மையத்தில் நடைபெற்று வரும் புற்றுநோய் சிகிச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனையில் அனைத்து விதமான புற்று நோய்களையும் எவ்வித பக்க விளைவும் இன்றி குணப்படுத்தும் முறைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிராக்கல் மேலாளர் ரமேஷ் குமார் மற்றும் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...