கோவை தொழிலதிபர் மனைவியிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

கோவையில் தொழிலதிபர் மனைவியிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி செய்த வழக்கில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொலைபேசி மூலம் மோசடி செய்யப்பட்டது.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜவுளித் தொழிலதிபர் ஆனந்தன் (52) மனைவி ஆர்த்தி (47) என்பவரிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆர்த்தியின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அழைத்தவர்கள் தங்களை மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், பணப்பரிமாற்றம் தொடர்பாக நடைபெற்ற மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறினர். இதை நம்பிய ஆர்த்தி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பின்னர், அந்நபர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி, அதன் விவரங்களைக் கேட்டனர். மேலும், ஆர்த்தியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.52 லட்சத்தை, தாங்கள் கூறும் வங்கி எண்ணுக்கு பரிமாற்றம் செய்யுமாறும், விசாரணை முடிந்த பிறகு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதை உண்மை என நம்பிய ஆர்த்தி, அந்நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.52 லட்சத்தை பரிமாற்றம் செய்தார். அதன் பிறகு, அந்நபர்கள் தொடர்பை துண்டித்துவிட்டனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இது குறித்து செப்டம்பர் 23 அன்று ஆர்த்தி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...