கோவையில் 50 ஆண்டுகால சாரமேடு ஆக்கிரமிப்பு அகற்றம்: மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில், சாரமேடு சாலையில் 50 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. முதற்கட்டமாக 27 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை அகலம் 45 அடியிலிருந்து 50 அடியாக விரிவடைந்தது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சாரமேடு சாலையில் கடந்த 50 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாரமேடு சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் காரணமாக சாலையின் அகலம் 15 அடியாக குறுகியிருந்தது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்த பின்னர், ஆக்கிரமிப்புகளை மூன்று கட்டங்களாக அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, செப்டம்பர் 25, 2023 அன்று முதற்கட்ட நடவடிக்கையாக நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சாலையின் இருபுறமும் 660 அடி நீளத்தில் இருந்த 27 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.



இந்த நடவடிக்கையால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் சாலையின் அகலம் 45 அடியிலிருந்து 50 அடியாக விரிவடைந்துள்ளது.



இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இச்சாலை பொள்ளாச்சி சாலையையும் நஞ்சுண்டாபுரம் சாலையையும் இணைக்கும் முக்கிய பிரதான சாலையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி ஆணையர், இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...