கோவையில் இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: பிசியோதெரபிஸ்ட் கைது

கோவை ஐ.ஓ.பி. காலனியில் 68 வயது பிசியோதெரபிஸ்ட் 23 வயது இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சம்பவம் 2023 ஜனவரியில் நடந்தது.


Coimbatore: கோவை மருதமலை அடுத்த ஐ.ஓ.பி. காலனியைச் சேர்ந்த 68 வயது பிசியோதெரபிஸ்ட் அனந்தகிருஷ்ணன், 23 வயது இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022ம் ஆண்டு ஐ.ஓ.பி. காலனியில் புதிதாக வீடு கட்டி வந்த அனந்தகிருஷ்ணன், கோவை ராமநாதபுரத்தில் தங்கி கட்டடக்கலை நிபுணராக பணிபுரிந்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கட்டட வடிவமைப்பிற்காக அழைத்திருந்தார். இதன்போது இருவரும் நட்பாகப் பழகி வந்தனர்.



2023ம் ஆண்டு ஜனவரி மாதம், புதிய வீட்டின் வடிவமைப்பு குறித்து சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி அனந்தகிருஷ்ணன் அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்தார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த காபி கொடுத்து, மயங்கிய நிலையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.

கண் விழித்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண் தேசிய மகளிர் ஆணையத்தை நாடினார்.



மகளிர் ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தும்படியும், வடவள்ளி காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், போத்தனூர் உதவி ஆணையர் கரிகால் பாரி சங்கரை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமித்தார்.

விசாரணையில் பாலியல் பலாத்காரம் உறுதியானதை அடுத்து தலைமறைவான அனந்தகிருஷ்ணன், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் கோவைக்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 24 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...