GST பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் குழு: வானதி சீனிவாசன் தகவல்

கோவையில் GST தொடர்பான பிரச்சினைகள் அமைச்சர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். போலி ஸ்மார்ட் கார்டு விவகாரம், சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவை ராமநாதபுரம் கொண்டசாமி லேஅவுட் மற்றும் அலமேலு மங்கம்மாள் லேஅவுட் பகுதிகளில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், "GST தொடர்பான சிக்கல்களை களைவதற்கு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கோவையில் கிடைத்துள்ள GST தொடர்பான விஷயங்கள் அந்த அமைச்சர்கள் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். மாநிலத்தின் நிதி அமைச்சரிடமும் GST தொடர்பான கருத்துக்களை வழங்க இருக்கிறோம்" என்றார்.



ஸ்மார்ட் கார்டுகள் போலியாக உருவாக்கப்படுவது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய வானதி சீனிவாசன், "ஏழைகளுக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. மாநில அரசு இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "என்கவுண்டர் செய்தால் மக்களை சமாதானப்படுத்தி விடலாம் என்று அரசு நினைக்கிறது. பிரச்சனைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு காண அரசு முயற்சிப்பதில்லை. அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு மாற்றம் இருக்கலாம் ஆனால் ஏமாற்றம் தமிழக மக்களுக்கு தான்" என்றார்.



பெண்கள், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்தும் அவர் பேசினார். "உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுபவர்களை கைது செய்கிறது அரசு" என்று விமர்சித்தார்.

மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "கொடுக்கின்ற பணத்தை செலவு செய்யாமல் பிரதமர் பணம் கொடுக்கவில்லை என்று கோரிக்கை வைப்பது ஏன்?" என்ற கேள்வியை எழுப்பினார்.

கோவை புட்டுவிக்கி பகுதியில் மனித கழிவுகள் நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மனித கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...