கோவையில் கால்நடை கணக்கெடுப்பு: பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் அக்டோபர் 2024-ல் தொடங்கும் 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோரியுள்ளார். கணக்கெடுப்பு பணிக்கு 234 கணக்கெடுப்பாளர்களும், 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (செப்டம்பர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்நடை கணக்கெடுப்பு பணி குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

கால்நடை கணக்கெடுப்பு பணி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசின் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பின் மூலம் கால்நடைகள் தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலம் பேணுவதற்கான சரியான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த கணக்கெடுப்பில் வீடுகள், கடைகள், தோட்டங்கள், பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு இதற்காக உருவாக்கப்பட்ட செயலியின் மூலம் கைபேசியில் பதிவு செய்யப்படும்.

தற்போது நாடு தழுவிய 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி அக்டோபர் 2024 மாத ஆரம்பத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பணிக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 234 கணக்கெடுப்பாளர்களும், அவர்களின் பணியை கூர்ந்தாய்வு செய்ய 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இத்திட்டப் பணி தொடர்பான பயிற்சிகள் பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் மாத ஆரம்பத்தில் தொடங்கவிருக்கும் கால்நடை கணக்கெடுப்புப் பணி குறித்த விவரங்களை சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை நல்ல முறையில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...