கோவை 54வது வார்டில் குடிநீர் பிரச்சனை: கிழக்கு மண்டல தலைவர் நேரடி ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 54வது வார்டில் குடிநீர் மற்றும் உப்பு நீர் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் 54வது வார்டில் உள்ள மதுரை வீரன் கோவில் பகுதியில் குடிநீர் மற்றும் உப்பு நீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் இன்று (24.09.2024) அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது அவர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பிரச்சனைகளை சரிசெய்யுமாறு வலியுறுத்தினார்.



குறிப்பாக, உப்பு நீர் மற்றும் குடிநீர் விநியோகத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது பகுதிச் செயலாளர் சிவா MC, வட்டச் செயலாளர் ஆனந்த், உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், கொங்கு பேரவை தனபால், ஆடிட்டர் சசிகுமார், சூயஸ் தியாகு, சானிடரி சூப்பர்வைசர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

மண்டல தலைவரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் உடனடி நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குடிநீர் மற்றும் உப்பு நீர் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...