கோவை 54வது வார்டில் குடிநீர் பிரச்சனை: கிழக்கு மண்டல தலைவர் நேரடி ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 54வது வார்டில் குடிநீர் மற்றும் உப்பு நீர் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் 54வது வார்டில் உள்ள மதுரை வீரன் கோவில் பகுதியில் குடிநீர் மற்றும் உப்பு நீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் இன்று (24.09.2024) அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது அவர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பிரச்சனைகளை சரிசெய்யுமாறு வலியுறுத்தினார்.



குறிப்பாக, உப்பு நீர் மற்றும் குடிநீர் விநியோகத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது பகுதிச் செயலாளர் சிவா MC, வட்டச் செயலாளர் ஆனந்த், உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், கொங்கு பேரவை தனபால், ஆடிட்டர் சசிகுமார், சூயஸ் தியாகு, சானிடரி சூப்பர்வைசர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

மண்டல தலைவரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் உடனடி நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குடிநீர் மற்றும் உப்பு நீர் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...