கோவை 54வது வார்டில் குடிநீர் பிரச்சனை: கிழக்கு மண்டல தலைவர் நேரடி ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 54வது வார்டில் குடிநீர் மற்றும் உப்பு நீர் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் 54வது வார்டில் உள்ள மதுரை வீரன் கோவில் பகுதியில் குடிநீர் மற்றும் உப்பு நீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் இன்று (24.09.2024) அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது அவர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பிரச்சனைகளை சரிசெய்யுமாறு வலியுறுத்தினார்.



குறிப்பாக, உப்பு நீர் மற்றும் குடிநீர் விநியோகத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது பகுதிச் செயலாளர் சிவா MC, வட்டச் செயலாளர் ஆனந்த், உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், கொங்கு பேரவை தனபால், ஆடிட்டர் சசிகுமார், சூயஸ் தியாகு, சானிடரி சூப்பர்வைசர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

மண்டல தலைவரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் உடனடி நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குடிநீர் மற்றும் உப்பு நீர் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...