குனியமுத்தூர், மயிலம்பட்டி, அண்ணா பல்கலை, அங்கலக்குறிச்சி பகுதிகளில் நாளை மின்தடை

கோவையில் நான்கு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர், மயிலம்பட்டி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அங்கலக்குறிச்சி ஆகிய நான்கு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாளை (செப்டம்பர் 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் குனியமுத்தூர், சுந்தராபுரம் ஒரு பகுதி, கோவை புதூர், புட்டுவிக்கி, நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூர் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும்.

மயிலம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி, ஆண்டக்காபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, IOB காலனி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், மருதமலை கோவில் சுற்றுப்பகுதிகள், டாடா நகர், அண்ணா நகர், லட்சுமி நகர், டன்சா நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குறியா கார்டன், கோல்டன் நகர், மருதநகர், சின்மயா நகர், இந்திரா நகர், ஜி.கே.எஸ் அவென்யூ, சுப்ரமணியம் நகர் மற்றும் பொம்மனம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

அங்கலக்குறிச்சி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேற்கூறிய அனைத்து பகுதிகளிலும் மின்தடை அமல்படுத்தப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...