தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 26 முதல் 29 வரை மாநில அளவிலான உழவர் தின விழா நடைபெறுகிறது. 250-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள் மற்றும் விருது வழங்கும் விழா ஆகியவை இடம்பெறுகின்றன.



Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா நடைபெற உள்ளது. தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியோருடன் இணைந்து இவ்விழா நடத்தப்படுகிறது.

இவ்விழாவில், 250-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், நேரடி பண்ணை செயல் விளக்கங்கள், புதிய பயிர் இரகங்கள் மற்றும் பண்ணைக் கருவிகளின் மாதிரித் திடல்கள் ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும், தலைசிறந்த விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி கூறுகையில், "காலநிலை மாற்றம், விலையேற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்டவை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன. இந்த சவால்களை சமாளிக்கும் வகையில், 'வேளாண்மையில் நவீன உத்திகள்' என்ற தலைப்பில் உழவர் தின விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இந்த விழாவில் புதிய பயிர் ரகங்கள், புதிய தொழில் நுட்பங்கள், மேம்பட்ட நீர்ப்பாசன முறைகள், வேளாண் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். சிறுகுறு விவசாயிகளுக்கு வங்கி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள், பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விளக்கங்கள், மற்றும் வேளாண் இயந்திரங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படும்.

விழா நடைபெறும் நான்கு நாட்களும் பல்வேறு தலைப்புகளில் விஞ்ஞானிகள், வல்லுனர்கள், பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.

இவ்விழாவை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைக்க உள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர், தொழில் முனைவோர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...