கோவை குற்ற விவாதிப்பு கூட்டத்தில் சிறந்த காவல் துறையினருக்கு கண்காணிப்பாளர் பாராட்டு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. சிறப்பாக பணியாற்றிய 42 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் செப்டம்பர் 23 அன்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தின் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கடந்த மாதம் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பாராட்டு பெற்றவர்களில் காவல் ஆய்வாளர்கள் 3 பேர், உதவி ஆய்வாளர்கள் 6 பேர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 8 பேர், தலைமைக் காவலர்கள் 5 பேர், முதல் நிலைக் காவலர்கள் 3 பேர், மற்றும் காவலர்கள் 17 பேர் என மொத்தம் 42 பேர் அடங்குவர். இந்த பாராட்டு விழா காவல் துறையினரின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...