ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் அவர் எடுத்துரைத்தார்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூரில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் 116வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மகாலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொரடாவுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அதிமுக ஆட்சியின் போது காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை, மீனவர் பிரச்சினை ஆகிய தமிழக உரிமைகளை மீட்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.



கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று வேலுமணி குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின் போது ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரளா அரசுடன் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி கமிட்டி அமைத்ததாகவும், ஆனால் இந்த திமுக அரசு ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி கார்த்திக், ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...

ஓணம்பாளையம் குடியிருப்பில் கஞ்சா செடி பறிமுதல் - வட மாநில தொழிலாளர்கள் விசாரணையில்

வடவள்ளி அருகே ஓணம்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் 4 அடி உயர கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டது. கா...

தேர்தல் சின்ன விவகாரம்: குப்பை சேகரிப்பு விசில் ஒலிக்கத் தடை கோரி மனு

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும்போது அடிக்கும் விசில், அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம் என்ப...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி மாமன்ற உறுப்பினர் மனு: கோவை ஆட்சியருக்கு சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பின்போது தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் விசில், மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல்...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மனு

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்துவது மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல் சின்...