கோவையில் இருதய ஆரோக்கியம் குறித்த மாபெரும் கண்காட்சி: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஏற்பாடு

கோவை புரூக்பீல்ட்ஸ் மாலில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பதி துவக்கி வைத்தார். செப்டம்பர் 22 வரை நடைபெறும்.


கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த மாபெரும் கண்காட்சி புரூக்பீல்ட்ஸ் மாலில் நடைபெற்றது. வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கண்காட்சியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, IAS அவர்கள் செப்டம்பர் 21 அன்று துவக்கி வைத்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி C.V ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் Dr. S. ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் Dr. S. அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் கண்காட்சி துவங்கியது.

கண்காட்சியில் இருதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விளக்கும் வகையில் மாதிரி இருதயத்தின் உடற்கூறியல் இடம்பெற்றிருந்தது. இதயத்தில் ஸ்டென்ட் எவ்வாறு பொருத்தப்படும், இதயத்தில் உள்ள அடைப்புகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகின்றன என்பது தெளிவாக விளக்கப்பட்டது. பேஸ்மேக்கர் குறித்த காட்சியும் இடம்பெற்றிருந்தது.

குழந்தைகளுக்கான இருதயவியல், சிறப்பு இருதய அறுவை சிகிச்சைகள், எலெக்ட்ரோபிசியாலஜி, லேசர் கரோனரி ஆன்ஜியோபிளாஸ்ட்டி குறித்த புதிய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்கள் காணொளிகளின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன. நேரடியாக CPR செயல்விளக்கமும் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர்கள், இருதய நோய்களைத் தவிர்க்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இக்கண்காட்சி செப்டம்பர் 22 வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...

ஓணம்பாளையம் குடியிருப்பில் கஞ்சா செடி பறிமுதல் - வட மாநில தொழிலாளர்கள் விசாரணையில்

வடவள்ளி அருகே ஓணம்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் 4 அடி உயர கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டது. கா...

தேர்தல் சின்ன விவகாரம்: குப்பை சேகரிப்பு விசில் ஒலிக்கத் தடை கோரி மனு

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும்போது அடிக்கும் விசில், அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம் என்ப...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி மாமன்ற உறுப்பினர் மனு: கோவை ஆட்சியருக்கு சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பின்போது தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் விசில், மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல்...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மனு

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்துவது மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல் சின்...