பொள்ளாச்சி அருகே வாடகை பாத்திர கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியில் உள்ள வாடகை பாத்திர கடையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு பகுதியில் வாடகை பாத்திர கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் கருகி நாசமானது.

ஆழியாறு பகுதியைச் சேர்ந்த கஸ்தூரிராஜா என்பவர், வால்பாறை ரோடு பகுதியில் ஆழியாறு தபால் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த ஒரு வருடமாக வாடகை பாத்திர கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நாகராஜ் என்பவர் இரவு தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நேற்று நள்ளிரவில் நாகராஜ் வழக்கம் போல கடைக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். சுமார் ஒரு மணி அளவில் கடைக்குள் உள்ளே பிளாஸ்டிக் சேர்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்த நாகராஜ் வெளியே வந்து அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.



உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



ஆனால், அதற்குள் கடையிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன.

இந்த சம்பவம் குறித்து ஆழியாறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஆழியாறு பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...