எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தி பேசியதற்கு எதிராக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, எச்.ராஜாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மாவட்ட தலைவர் N.K.பகவதி பேசுகையில், "பாரம்பரியமிக்க நாட்டுக்காக தங்களுடைய சொத்துக்களை வழங்கி, இந்த நாட்டுக்காக பாட்டி, தந்தையை இழந்து நாட்டிற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் தலைவரை பார்த்து தேசவிரோதி என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார்" என்று கூறினார்.

மேலும் அவர், "இதற்கு மேல் ராகுல் காந்தியை எச்.ராஜா விமர்சித்தால், அவர் செல்லும் இடமெல்லாம் செருப்படி கொடுப்போம்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக நடைபெற்றது.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...