பொள்ளாச்சி நகராட்சியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண கள ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். வார்டுகளில் நேரடி ஆய்வு மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி.



கோவை: பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நகராட்சி நிர்வாக அதிகாரிகள், நகர மன்ற தலைவர் தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒவ்வொரு வாரமும் பிரதி செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு அவ்வப்போது தீர்வுகள் எட்டப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நேரடியாக தினசரி 3 வார்டுகள் வீதம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 1, 2, 3 வார்டுகளில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் கணேசன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.





இந்த ஆய்வின் போது, வடுகபாளையம் நடுநிலைப் பள்ளியில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பள்ளி வகுப்பறை, கழிப்பிடம், சமையலறை கூடம் மற்றும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.



மேலும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தேவையற்ற செடிகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...