பொள்ளாச்சி நகராட்சியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண கள ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். வார்டுகளில் நேரடி ஆய்வு மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி.



கோவை: பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நகராட்சி நிர்வாக அதிகாரிகள், நகர மன்ற தலைவர் தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒவ்வொரு வாரமும் பிரதி செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு அவ்வப்போது தீர்வுகள் எட்டப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நேரடியாக தினசரி 3 வார்டுகள் வீதம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 1, 2, 3 வார்டுகளில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் கணேசன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.





இந்த ஆய்வின் போது, வடுகபாளையம் நடுநிலைப் பள்ளியில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பள்ளி வகுப்பறை, கழிப்பிடம், சமையலறை கூடம் மற்றும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.



மேலும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தேவையற்ற செடிகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...