திருப்பூரில் சுற்றுலா வளர்ச்சி ஆய்வுக் கூட்டம்: உலக சுற்றுலா தின விழாவை திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு

திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழாவை திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. சாகச சுற்றுலா செயல்பாடுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வுக் கூட்டம் உடுமலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது.



மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுற்றுலாத் துறையின் செயல்பாடுகள், நடைபெற்று வரும் திட்டப் பணிகள், தமிழ்நாடு அரசின் சுற்றுலாக் கொள்கை மற்றும் உலக சுற்றுலா தின விழா குறித்து விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுலா தொழில் முனைவோர்கள், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.



குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சாகச சுற்றுலா செயல்பாடுகளை அறிமுகப்படுத்தினால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று வலியுறுத்தினர். இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட சுற்றுலா அலுவலரிடம் கோரிக்கை விடுத்தனர்.



கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில், உலக சுற்றுலா தின விழாவை திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மேலும், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளையும், சுற்றுலா கருத்தரங்கமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இந்தக் கூட்டத்தில் உடுமலை அரசு கலைக்கல்லூரி சுற்றுலாத்துறை உதவி பேராசிரியர் விஜய் ஆனந்த், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், சுற்றுலா சங்கங்களின் நிர்வாகிகள் பிரசாத், பொன்ராஜ், செயது முஹமது, சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஆசிரியர் ஜவகர் தொகுத்து வழங்கினார்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...