கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் STEM மற்றும் ICT ஆய்வகம் திறப்பு

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் STEM மற்றும் ICT ஆய்வகம் திறப்பு. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 15 மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்கள் பயனடைவர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள STEM மற்றும் ICT ஆய்வகத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் இன்று (16.09.2024) துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.



இந்த ஆய்வகத்தில் STEM (Science Technology Engineering Mathematics - அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) மற்றும் ICT பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கோயம்புத்தூர் மாநகராட்சியின் 15 பள்ளிகளைச் சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரை வாரத்திற்கு 1 முதல் 3 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.



இந்த ஆய்வகத்தின் முதன்மை நோக்கம் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதாகும். ICT பேனல் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்துடன் அறிவியல், கணிதம் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 80க்கும் மேற்பட்ட மாதிரிகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன. இந்த மாதிரிகள் கருத்தியல் தெளிவைக் கொண்டு வருவதற்கும், குழந்தைகளுக்கான கற்றல் அனுபவத்தை வளர்ப்பதற்கும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், மாநகர கல்வி அலுவலர் குணசேகரன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், STEM மற்றும் ICT நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வரிடம் மனு

ஈரோட்டில் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கைத்தறி மற்றும...

கோவையில் ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள்: முக்கிய கட்சி வேட்பாளர்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை

Coimbatore மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 42 வேட்பாளர்கள் மன...

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Coimbatore மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது, Pharm-D மாணவரான முகேஷ் குமார் (23) மார்பு வலியால் சுயநினைவை இழந்த...

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் S.தாமோதரனை நேரில் சந்தித்து வாழ்த்திய அண்ணாமலை

கோவை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர...