வால்பாறை பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் பலத்தமழையால் மண் சரிவு- போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் சுமாரான அளவு மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறையில் அடிக்கடி மின்வெட்டு, தொலைபேசி சேவைகளும் பாதிப்பிற்குள்ளாகி வருவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் மண்ணும் கல்லும் விழுந்து கிடப்பதினால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.



இதனால் அவ்வழியாக பன்னிமேடு, மளுக்கப்பாறை, புதுக்காடு, சோலையார் அணை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், ஆம்புலன்சும் தற்போது செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, அரசு இதுவரை சாலையை சீரமைக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விரைவில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமவெளிப்பகுதியில் கோடை வெய்யில் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறையில் தினம் தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், வால்பாறை பகுதி குளிர்சியாக இருபதினாலும், தேயிலைத்தோட்டங்கள் பசுமையாக காட்சியளிப்பதாலும், சுற்றுலாப்பயணிகள் வால்பாறைக்கு சில வாரங்களாக அதிகமாக வரத்துவங்கியுள்ளனர்.

கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுணை, சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி, நீரார் அணை, சோலையார் அணை, சக்தி தலனார் காட்சி முணை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாபயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...