அன்னபூர்ணா விவகாரம்: நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை

கோவை ஆர்.எஸ். புரம் காந்தி பார்க் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



Coimbatore: கோவை ஆர்.எஸ். புரம் காந்தி பார்க் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியானது தொடர்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "பன் மாலை" அணிந்தும், பங்கேற்பாளர்களுக்கு "க்ரீம் பன்" வழங்கியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலையிட்டு, தனது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும்" என்றார்.

மேலும் அவர், "முதலில் அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க சொன்னது தவறு. அவரே பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டு இருந்தாலும், அதனை வீடியோவாக வெளியிட்டது மிகப்பெரிய தவறு. அவர் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லை. தொழிலாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.

"இதனை பாசிசத்தின் உச்சம் என நாங்கள் கண்டிக்கிறோம். உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டமாக இது முடியும்" என்று செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.

வீடியோவில் சீனிவாசனின் உடல்மொழி குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "அந்த வீடியோவில் பார்க்கும் போது அவரால் இருக்கையில் நன்றாக கூட அமர முடியவில்லை. அவர் அடிமையா? இந்த தேசத்திற்கு வரி கட்ட கூடியவர். பல்லாயிரம் தொழிலாளிக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருபவர் அவர் ஏன் கூனிக்குறுகி அமர வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"ஒரு நிதி அமைச்சரை சந்திக்க மற்ற கட்சியினர் செல்ல முடியுமா? இதைத் திட்டமிட்டு செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று செல்வப்பெருந்தகை தனது கருத்தை முடித்துக் கொண்டார்.

Newsletter

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...