மேட்டுப்பாளையம்- கோவை வழி தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், ஒலி மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை விதித்தது. 



இருப்பினும், பல்வேறு பகுதிகளில் இன்னும் சில தனியார் பேருந்துகள், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் இவ்வகையான ஏர் ஹாரன்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் ஆடியோ கருவிகளை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ தியாகராஜன் செவ்வாயன்று திடீர் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்தார்.

தொடர்ந்து சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறி அதிக வேகமாக செல்லும் பேருந்துகள் மீதும், ஓட்டுநர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...