மாநகராட்சியின் தூய்மை விளம்பர பலகை மட்டும் இங்கே? வேலை பணிகள் எங்கே?


கோவை மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் சார்பில் ஜனவரி மாதம் நடைபெற்ற 'ஸ்வச் சர்வேக்சன் 2017' கோவை முதலிடம் பெறுவதற்கு கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது. 


ஸ்மார்ட் சிட்டி குறித்து மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை மட்டும் இன்னும் ஆங்காங்கே உள்ள நிலையில், அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதால் வழக்கம்போல் கோவை மாநகரம் பழைய நிலைக்கு மாறியுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.





கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பை மற்றும் சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீரினால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போத்தனூர் ரயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலையில் சாக்கடை நீர் வழிந்த்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் தினத்தோறும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.




அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டும் செயல்பட்டு வருகிறது. இதில் பத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கும் இந்த நிலைமை மாறுவதற்கும் மாநகராட்சி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள். 







Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...